கஞ்சா விற்பனை செய்தவர்கள் கைது

கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே கஞ்சா விற்பனை ஈடுபட்ட இரண்டு வாலிபர்கள் கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-04-12 09:40 GMT

கைதானவர்கள்

கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே பன்றிபாலம் பகுதியில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் இடைக்கோடு பிலாங்காலையை சேர்ந்த கிருஷ்ணன் மகன் வினீத், மற்றும் செம்மங்காலை பகுதியை சேர்ந்த மனோஜ் ஜெபனேசர் என்பது தெரிய வந்தது. மேலும் அவர்களை சோதனை செய்த போது 932.5 கிராம் கஞ்சா பொட்டலங்களை தனிப்படை போலீசார் கைப்பற்றினர்.

தொடர்ந்து மனோஜ் ஜெபனேசரை போலீசார் கைது செய்து, விற்பனைக்கு பயன்படுத்திய பைக், இரண்டு செல் போன், கஞ்சா விற்ற பணம் ரூ. 500, கஞ்சா எடை போட வைத்திருந்த ஏடை கருவி ஆகியற்றை கைப்பற்றினர். அவற்றை அருமனை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அவர்கள் குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News