மேலூர் அருகே கரம்பை மண் கடத்தல்: இருவர் கைது

மேலூர் அருகே கண்மாய் பகுதியில் சட்டவிரோதமான கரம்பை மண் அள்ளிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-01-29 16:15 GMT

மண் அள்ளிய ஜேசிபி இயந்திரம்

   மதுரை மாவட்டம் மேலூர் அருகே ஆலம்பட்டி பகுதியில் உள்ள பெரிய அழகாபுரி கண்மாய் பகுதியில் இரவு நேரத்தில், அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மண் அள்ளப்படுவதாக மேலவளவு காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற காவல்துறையினர். அங்கு, அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக கரம்பை மண் அள்ளிக் கொண்டிருந்த பிரசன்னா மற்றும் கருப்பையா ஆகியோரை கைது செய்து,

அவர்கள் மண் அள்ள பயன்படுத்திய டிப்பர் லாரி மற்றும் ஜேசிபி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக தப்பியோடிய மருததுரை, ராஜ்குமார் மற்றும் விவேக் உட்பட மூன்று பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கண்மாய் மற்றும் நீர்வரத்து பகுதிகளில் இரவு நேரங்களில், சட்டவிரோதமாக இதுபோன்ற மண் கடத்தல் நடைபெறுவதால் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியை மேற்கொள்ள வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்...

Tags:    

Similar News