எரிவாயு தகன மேடை பராமரிப்பு பொறுப்பு - ரோட்டரி கிளப்பிடம் ஒப்படைப்பு

வெள்ளக்கோவில் நகராட்சிக்கு சொந்தமான எரிவாயு தகன மேடை பராமரிப்பு பொறுப்பை வெள்ளகோவில் ரோட்டரி அறக்கட்டளையிடம் அமைச்சர் மு. பெ. சாமிநாதன் ஒப்படைத்தார்.

Update: 2024-01-05 08:40 GMT

பொறுப்பு ஒப்படைப்பு 

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் நகராட்சி அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் வெள்ளகோவில் மு.பெ.சாமிநாதன் நகராட்சிக்கு சொந்தமான எரிவாயு தகன மேடையை வெள்ளகோவில் ரோட்டரி அறக்கட்டளை வசம் ஒப்படைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக முகமையின் திட்ட இயக்குனர் மலர்விழி, திருப்பூர் மாநகராட்சியின் 4-ம் மண்டல தலைவர்இல.பத்மநாபன் ,வெள்ளகோவில் நகரமன்ற தலைவர் கனியரசிமுத்துக்குமார் ஆகியோர் உள்ளனர்.
Tags:    

Similar News