பெரம்பலூரில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு

பெரம்பலூரில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது.

Update: 2024-02-10 11:30 GMT

மாணவர்களுக்கு பரிசு வழங்கல் 

பெரம்பலூர் மாவட்ட கலைத் திருவிழா பரிசளிப்பு விழா பெரம்பலூர் மாவட்ட அளவில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நடைபெற்ற கலைத் திருவிழா நடணம்,கட்சிக்கலை,மொழித்திறன்,நாடகம் சார்ந்த 142 போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் பரிசளிப்பு விழா 09.02.2024 பெரம்பலூர் - துறையூர் சாலையில் அமைந்துள்ள சாரணர் கூட்டரங்கில் நடைபெற்றது.

48 அரசுப் பள்ளிகளைச் சார்ந்த வெற்றி பெற்ற 392 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்விற்கான வரவேற்புரையை உதவித் திட்ட அலுவலர் (இடைநிலை) ஜெய்சங்கர் வழங்கினார். இந்நிகழ்விற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன் தலைமையேற்று பேருரை வழங்கினார். மாவட்டக் கல்வி அலுவலர் இடைநிலை ஜெகநாதன் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் தொடக்கக் கல்வி அண்ணாதுரை வாழ்த்துரை வழங்கினர். இறுதியாக உதவித் திட்ட அலுவலர் தொடக்கக் கல்வி ரமேஷ் நன்றியுரை வழங்கினார்.

இந்நிகழ்வின் போது வட்டாரக் கல்வி அலுவலர்கள், வட்டார மேற்பார்வையாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் , ஆசிரியர் பயிற்றுநர்கள், ஆசிரியர்கள் , இல்லம் தேடிக் கல்வி ஆசிரிய ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தமிழ்நாடு கல்வி புத்தாய்வாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News