அரசு பள்ளி மாணவிக்கு பரிசு

ஆத்தூர் பகுதியில் நடந்த பேச்சுப் போட்டியில் பள்ளி மாணவி முதல் பரிசு பெற்றதால் வள்ளலார் அறக்கட்டளை சார்பில் பரிசு தொகை வழங்கப்பட்டது.

Update: 2024-02-03 05:14 GMT

அரசு பள்ளி மாணவிக்கு பரிசு  

கெங்கவல்லி:சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் நடந்த வள்ளலார் 200 என்ற தலைப்பில் பேச்சுப் போட்டியில் ஆத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கூலமேடு பள்ளி மாணவி மதுமிதா முதல் பரிசு பெற்றார். அவருக்கு வள்ளலார் அறக்கட்டளை சார்பில் பரிசு தொகை ரூ.4000 தரப்பட்டது. கூலமேடு அரசு பள்ளிக்கு கேடயம் வழங்கப்பட்டது. அருகில் ஆசிரியர் சுரேஷ் உடன் இருந்தார்.
Tags:    

Similar News