பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், கீழ்பாடியில் சமூக பாதுகாப்புத் துறை சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-02-09 07:31 GMT

பெண் குழந்தைகள் பாதுகாப்பு கூட்டம் 

ரிஷிவந்தியம் அடுத்த கீழ்பாடியில் சமூக பாதுகாப்புத் துறை சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, ஊராட்சி தலைவர் பழனியம்மாள் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் சிவசுப்ரமணியம் முன்னிலை வகித்தார். மக்கள் நலப் பணியாளர் மணிமேகலை வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சத்தியமூர்த்தி, மாவட்ட பெண் குழந்தைகள் நல அலுவலர் அமிர்தவல்லி பங்கேற்று, பெண் குழந்தைகள் பாதுகாப்பின் முக்கியத்துவம், கல்வி பயில்வதன் அவசியம், சிறுவயது திருமணத்தால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து விளக்கமளித்தார்.

மேலும், பெண் குழந்தைகள் பாதுகாப்புடன் இருக்க அவர்களுடன் அன்புடன் பழக வேண்டும், பள்ளியில் நடைபெறும் போட்டிகளில் பெண் குழந்தைகளை கட்டாயம் பங்கேற்க செய்ய வேண்டும். பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு தொலைபேசி எண் 1098 பயன்படுத்தி, ஆலோசனைகளை கேட்டறியலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பொதுமக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News