மின்சாரம் தாக்கி சிறுமி பலி!

திருவண்ணாமலை அருகே மின்சாரம் தாக்கி சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-05-23 15:50 GMT
பலி
திருவண்ணாமலை அடுத்த ஆடையூர் புனல்காடு பகுதியை சேர்ந்த சம்பத் என்பவரது மகள் சவிதா (வயது 17). இவர் பெரியபாலியப்பட்டு பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார்.அங்குள்ள மின்மோட்டார் இரும்பு பெட்டியை தொட்டு மோட்டாரை போட முயன்ற போது மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருவண்ணாமலை மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News