பள்ளி பேருந்து மோதி சிறுமி உயிரிழப்பு: ஓட்டுநர் கைது

பள்ளி பேருந்து மோதி சிறுமி உயிரிழந்த சம்பவத்தில் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2023-11-28 14:40 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கூக்கல் தொரை கிராமத்தில் நேற்று பள்ளி மாணவ மாணவிகளை இறக்கிவிட்ட பேருந்து அதே பகுதியைச் சேர்ந்த லயா ( 5) என்ற எல்கேஜி சிறுமி மீது மோதியது இதில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் (தியாகராஜன்) தப்பி ஓடினார்.

அவரை போலீசார் தேடி வந்த நிலையில் தற்போது அவரை கைது செய்துள்ளனர். நேற்று மாலை விபத்து நடந்தது எப்படி பேருந்து சரியான நிலையில் இருந்ததா ? எனவும் பள்ளிப் பேருந்தில் இருக்கக்கூடிய முன்பின் கேமராக்கள் சரியான முறையில் இயங்கினவா எனவும் பள்ளி பேருந்து அதிவேகமாக இயக்கப்பட்டதா என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News