பொது தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தங்க நாணயம்
கொரடாசேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொது தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பூண்டி நினைவு டவுன் கிளப் சார்பில் தங்க சங்கிலி மற்றும் தங்க நாணயம் வழங்கப்பட்டது.
Update: 2024-06-21 05:35 GMT
தங்க சங்கிலி அணிவித்த ஆட்சியர்
கொரடாசேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் மாவட்ட அளவிலும் பள்ளி அளவிலும் முதலிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பூண்டி நினைவு டவுன் கிளப் சார்பில் தங்க சங்கிலி மற்றும் தங்க நாணயம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.