சிலுவைப்பாதை நிகழ்வுகளை நடித்துக் காட்டிய கிறிஸ்தவர்கள்

பி.பள்ளிபட்டியில் புனித வெள்ளியை முன்னிட்டு கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் சிலுவை பாதை நிகழ்வுகளை தத்ரூபமாக நடித்துக் காட்டினர்

Update: 2024-03-29 05:07 GMT
கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இயேசுவின் சிலுவை பாடுகள் மற்றும் அவரது இறப்பை குறிக்கின்ற வகையில் துக்க நிகழ்வை அனுசரிப்பது வழக்கம் இதனை குறிக்கும் பொருட்டு தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பி பள்ளிப்பட்டி புனித லூர்து மாதா தேவாலயத்தை சார்ந்த இறைமக்கள் தேவாலய முன்பு அமைந்துள்ள சாலையில் இன்று காலை தத்ரூபமாக இயேசுவின் சிலுவை பாதை நிகழ்வுகளை நடித்து காட்டினார்கள். இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியில் சேர்ந்த ஏராளமான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மற்றும் பொதுமக்கள் பக்தியுடன் வழிபாடு செய்தனர்.
Tags:    

Similar News