அரசு பேருந்து ஓட்டுனர் கைது

ராமநாதபுரம் திருவாடானையில் அரசு டவுன் பஸ் மோதியதில் முதியவர் பலியானார்.

Update: 2023-12-21 12:22 GMT

 திருவாடானையில் அரசு டவுன் பஸ் மோதியதில் முதியவர் பலியானார்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள கரையைகோட்டையைச் சேர்ந்த செல்லப்பன் (70) முதியவரான இவர் தனது கிராமத்தில் இருந்து சைக்கிளில் திருவாடானை நோக்கி வந்து கொண்டிருந்தபோது திருவாடானை ஓரியூர் செல்லும் சாலையில் அழகமடை செல்லும் விலக்கில்  வந்த போது, எதிரே வந்த அரசு டவுன் பஸ் மோதியதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது உடன் அவரை அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த  விபத்தில் பேருந்தில் கண்ணாடி உடைந்து கண்ணம்புஞ்சை கிராமத்தைச் சேர்ந்த சண்முவள்ளி (40) என்ற பெண்ணிற்கு காலில் காயம் ஏற்பட்டது.அவர் திருவாடானை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் முதியவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார் திருவாடானை போலீசார் வழக்கு பதிவு செய்து பேருந்தை கைப்பற்றி அரசு பேருந்து ஓட்டுனர் ஜான் பிரிட்டோவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News