போக்குவரத்து விதிகளை மீறும் பேருந்துகள்

அரசு மற்றும் தனியார் பேருந்துகள் காமராஜர் வீதி, காந்தி ரோடு வழியாக செல்வதை தவிர்க்க, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Update: 2024-02-09 05:46 GMT

விதி மீறல் 

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து, தாம்பரம், செங்கல்பட்டு, திண்டிவனம், வந்தவாசி, திருவண்ணாமலை, செய்யார் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், காஞ்சிபுரம் ஆஸ்பிடல் ரோடு, ரயில்வே ரோடு, தேரடி வழியாக செல்ல வேண்டும். பெரும்பாலான அரசு பேருந்து ஓட்டுனர்கள், காலை மற்றும் மாலை பீக் ஹவரில் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து, காமராஜர் வீதி, காந்தி ரோடு வழியாக செல்கின்றனர். இதேபோன்ற நேரங்களில் காமராஜர் வீதி மற்றும் மூங்கில் மண்டபம் பகுதிகளில், வாகன விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, தாம்பரம், செங்கல்பட்டு, செய்யாறு ஆகிய பகுதிக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் காமராஜர் வீதி, காந்தி ரோடு வழியாக செல்வதை தவிர்க்க, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.
Tags:    

Similar News