அரசு ஊழியர்கள் பட்டினி போராட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமுல்படுத்தக்கோரி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, அரசு ஊழியர்கள் பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2023-12-02 11:00 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ராமநாதபுரத்தில் சிபிஎஸ் (பங்களிப்பு ஓய்வூதிய திட்ட) ஒழிப்பு இயக்கத்தின் சார்பில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி அரசு ஊழியர்கள் பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இராமநாதபுரம் ஆட்சித் தலைவர் அலுவலகம் அருக் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில இணை ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் தலைமையில் நடைபெறும் இந்த பட்டினி போராட்டத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதி எண். 309-ன் படி புதிய ஓய்வூதியம் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுருத்தியும் பழைய ஓய்வுதிய திட்டத்தை உடனடியாக அமுல்படுத்தவும், சிபிஎஸ் திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பணிக் கொடை நிதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 200 க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News