கல்வி உதவித்தொகை பெற அரசுப்பள்ளி மாணவிகள் விண்ணப்பிக்கலாம் !

அரசுப் பள்ளிகளில் 9 மற்றும் 10ம் வகுப்பு படிக்கும் தகுதியுள்ள மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

Update: 2024-01-31 09:06 GMT
 அரசுப் பள்ளிகளில் 9 மற்றும் 10ம் வகுப்பு படிக்கும் தகுதியுள்ள மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 9 மற்றும் 10 -ஆம் வகுப்புகளில் பயிலும் பிற்படுத்தப்ட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிட தமிழக அரசு உத்தேசித்துள்ளது.

எனவே, இத்திட்டத்தின்கீழ் பயன்பெற  பெற்றோரின் உச்சகட்ட ஆண்டு வருமானம் ரூ.2.5 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும். மேலும், தகுதியுள்ள மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.4,000/- கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும். இத்திட்டத்தின்கீழ் பயன்பெற 9 மற்றும் 10-ஆம் வகுப்பில் பயிலும் மாணவிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் அல்லது அஞ்சல் வங்கிகளில் தமது பெயரில் வங்கிக்கணக்கு துவங்கி அதனை தமது ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும்.

மேற்படி ஆதார் எண் மற்றும் வங்கி விபரங்களை தமது வருமானச் சான்று மற்றும் சாதிச்சான்று நகல்களுடன் சம்மந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். அரசுப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மாணவியர்களது விபரங்களை  இணையதளத்தில் பதிவேற்றம் செய்து பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags:    

Similar News