கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் சுவரில் மோதி விபத்து

மயிலாடுதுறை அருகே அரசு பஸ் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த கடை சுவரில் மோதி விபத்து உண்டானது; சாலையோரம் நடந்து சென்ற மாணவி நூலிழையில் உயிர் தப்பினார்.

Update: 2024-04-10 13:51 GMT

 மயிலாடுதுறை அருகே அரசு பஸ் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த கடை சுவரில் மோதி விபத்து உண்டானது; சாலையோரம் நடந்து சென்ற மாணவி நூலிழையில் உயிர் தப்பினார்.  

கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலிருந்து நாகப்பட்டினம் நோக்கி அரசு பேருந்து சென்றுள்ளது. சிதம்பரம் அரசு போக்குவரத்து பணிமனைக்கு உட்ப்பட்ட இப்பேருந்தை தற்காலிக பேருந்து ஓட்டுனர் இயக்கியுள்ளார். இப்பேருந்து மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கருவி அருகே வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து இடது புறம் இருந்த கடையின் சுவற்றில் மோதி விபத்துக்கு உள்ளானது. பேருந்து விபத்துக்குள்ளாகும் போது சாலையோரம் நடந்து சென்ற பள்ளி மாணவின் மீதும் மோதியது. முன்னதாக பேருந்து சுவற்றில் மோதியதில் சுவர் கீழே விழுந்ததால் மாணவி சிறு காயத்துடன் அதிர்ஷ்டவசமாக நூலிழையில் உயிர் தப்பினார். இதன் பதற வைக்கும் சி.சி.டி.வி காட்சி காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
Tags:    

Similar News