அரசு பஸ் சக்கரம் ஏறி டிரைவர் கால் நசுங்கியது - போலீசார் வழக்கு
கெங்கவல்லி அருகே அரசு பஸ் கட்டுப்பாட்டை இழந்ததை அடுத்து சக்கரம் ஏறி டிரைவர் கால் நசுங்கியது.;
By : King 24x7 Angel
Update: 2024-02-22 05:18 GMT
சக்கரம் ஏறி டிரைவர் கால் நசுங்கியது
கெங்கவல்லி,: கெங்கவல்லி அருகே ஆணையாம்பட்டி பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் ரமேஷ்(35). இவர் லாரி டிரைவராக வெளிமாநிலத்தில் வேலை செய்து வருகிறார். தற்போது, ரமேசுக்கு உடல்நிலை சரியில்லாததால், ஆத்தூரில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று தனது டூவீலரில், ஆத்தூருக்கு சிகிச்சைக்கு சென்று விட்டு, மீண்டும் ஊருக்கு கெங்கவல்லி சமத்துவபுரம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது, எதிரே திருச்சியிலிருந்து ஆத்தூரை நோக்கி வந்த அரசு பஸ், கட்டுப்பாட்டை இழந்து ரமேஷ் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி விழுந்த அவரது வலது கால் மீது பஸ் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் ரமேசின் வலது கால் முட்டிக்கு கீழே நசுங்கியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கெங்கவல்லி போலீசார், ரமேசை மீட்டு கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.