சங்கரன்கோவில் பள்ளியில் பட்டமளிப்பு விழா

சங்கரன்கோவில் கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையருக்கு பட்டமளிப்பு விழா, கலை விழா நடைபெற்றது.

Update: 2024-04-02 03:43 GMT

சங்கரன்கோவில் கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையருக்கு பட்டமளிப்பு விழா, கலை விழா நடைபெற்றது.


தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையருக்கு பட்டமளிப்பு விழா, கலை விழா நடைபெற்றது. முன்னாள் மாவட்ட கல்வி அலுவலா் ராமசுப்பு தலைமை வகித்தாா்.

சிறப்பு விருந்தினா்களாக புதிய பாா்வை சேவா டிரஸ்ட் தலைவா் ராமகிருஷ்ணன், ரோட்டரி சங்க முன்னாள் உதவி ஆளுநா் ஏ.கே. பாஸ்கரன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்று, 120 மழலையருக்கு பட்டங்கள் வழங்கிச் சிறப்பித்தனா்.

மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளி முதல்வா் பழனிச்செல்வம் வரவேற்றாா். ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் செய்திருந்தனா்.

Tags:    

Similar News