நாமக்கல் ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியில் பட்டமளிப்பு விழா!

Update: 2024-03-29 10:41 GMT

நாமக்கல் ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியில் 24/3/2024 அன்று காலை 9.00 மணி அளவில் மழலையர் பள்ளி (UKG) முடித்து துவக்கப் பள்ளியில் (GRADE-1)சேரும் மாணவர்களுக்கும், தொடக்கப்பள்ளி முடித்து (GRADE-6) சேரும் மாணவர்களுக்கும் பட்டமளிப்பு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியின் முதல்வர் திருமதி. சுபாஷினி அவர்கள் தலைமை தாங்கினார்.

தமிழ்த் தாய் வாழ்த்து உடன் நிகழ்வு இனிதே தொடங்கியது .ஐந்தாம் வகுப்பு மாணவி வரவேற்புரை வழங்கினார். அதை தொடர்ந்து மாணவியின் கண் கவரும் வரவேற்பு நடன நிகழ்ச்சி நிகழ்ந்தது. அடுத்த நிகழ்வாக UKG மற்றும் 5 thதேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும் பட்டம் வழங்கப்பட்டது.

சிறப்பு விருந்தினரான முதல்வர் அவர்கள் பேசும்பொழுது "கல்வியின் அவசியத்தையும், கல்வி நம் வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றத்தையும்" மாணவர்களுக்கு சிறப்பாக எடுத்துக் கூறினார்.

நிகழ்ச்சியின் நிறைவாக மாணவர் நன்றி உரைக்குப் பின்பு ,நாட்டுப்பண் இசைக்கப்பட்டு விழா இனிதே நிறைவுற்றது.

அனைத்து மாணவர்களுடனும் முதல்வர், ஒருங்கிணைப்பாளர் ,ஆசிரியர்கள் அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Tags:    

Similar News