ஈரோடு மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் ஜனவரி 26 ம் தேதி கிராமசபைக்கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-01-21 04:46 GMT

ஈரோடு மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்

ஈரோடு மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினமான 26.01.2024-ம் தேதியன்று முற்பகல் 11.00 மணிக்கு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. கூட்டம் நடைபெறும் இடம், நேரம் ஆகியன தொடர்புடைய கிராம ஊராட்சிகள் மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும். 2024 ஜனவரி 26-ஆம் தேதி (குடியரசு தினம்) அன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கையினை பார்வைக்கு வைத்தல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலம் 2024. 25-ம் நிதியாண்டிற்கான கிராம வளர்ச்சித் திட்டம் தயாரித்தல், தூய்மை பாரத இயக்கம் அறிவிப்பு செய்தல், ஐன் ஜீவன் இயக்கம் குறித்து விவாதித்தல். அனைத்து கிராம ஊராட்சிகளும் கிராம சபைக் கூட்டங்கள் முறையாக நடைபெறுவதைக் கண்காணிக்கும் பொருட்டு வட்டார அளவில் உதவி இயக்குநர் நிலையில் பற்றாளர்கள் மற்றும் ஊராட்சி அளவிலான பற்றாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News