காவலர் சேமநல நிதியிலிருந்து உதவித்தொகை வழங்குதல்

திருவாரூர் மாவட்ட காவல்துறையினருக்கு சேமநல நிதியிலிருந்து உதவி தொகை வழங்கப்பட்டது.

Update: 2024-03-11 12:05 GMT

சேமநல நிதி

திருவாரூர் மாவட்ட காவல் துறையில் பணிபுரியும் காவல் அலுவலர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் மருத்துவ சிகிச்சை மற்றும் குடும்ப உறுப்பினர் இறப்பிற்கு தமிழ்நாடு காவலர் சேமநல நிதியிலிருந்து மருத்துவ உதவி தொகை மற்றும் உதவி தொகை பெற்று வழங்கப்படுகிறது.

திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் ஏழு காவல் அலுவலர்களுக்கு தமிழ்நாடு காவலர் சேமநல நிதியிலிருந்து ரூபாய் இரண்டு லட்சத்து 64 ஆயிரத்து 321 ரூபாய்க்கான காசோலையினை எஸ்பி ஜெயக்குமார் வழங்கினார்.

Tags:    

Similar News