திருவண்ணாமலையில் ஜூன் 10 முதல் குறைதீர் கூட்டம்

திருவண்ணாமலையில் ஜூன் 10 முதல் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2024-06-08 06:00 GMT

குறைதீர் கூட்டம் 

திருவண்ணாமலை மாவட்டத்தில் திங்கட்கிழமை (ஜூன் 10) முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஆரணி, செய்யாறு கோட்டாட்சியர் அலுவலகங்களில் மக்கள் குறைதீர் கூட்டங்கள் நடைபெறும்.

இதே போல, மனு நீதி நாள் முகாம்கள், விவசாயிகள் குறைதீர் கூட்டங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்களும் வழக்கம்போல நடைபெறும். இக்கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News