போளூரில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

போளூரில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-12-13 09:48 GMT

கோப்பு படம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

போளூரில் நேற்று செவ்வாய்க்கிழமை (டிச.12) மின் நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம் நடைபெற்றது திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மின் நுகர்வோர்களின் குறைகள், கோரிக்கைகளை நேரில் கேட்டு நிவர்த்தி செய்யும் வகையில் மாதம்தோறும் குறைதீர் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, போளூர் மின் வாரிய கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை (டிச.12) காலை 10 மணிக்கு நடைபெற்றது கோட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் உள்ள குறைகளை மனுக்களை கொடுத்தனர். பொதுமக்கள் கொடுத்த மனுக்களை பெற்றுக்கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார் திருவண்ணாமலை மின் வாரிய மேற்பார்வைப் பொறியாளர் பழனிராஜு

Tags:    

Similar News