அம்மாசத்திரத்தில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்!

மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் அம்மா சத்திரம் துணை மின் நிலையம் வளாகத்தில் 13ஆம் தேதி நாளை காலை 11 மணி முதல் 1 மணி வரை புதுக்கோட்டை மேற்பார்வை பொறியாளர் சேகர் தலைமையில் நடக்கிறது.

Update: 2024-06-12 07:06 GMT

குறைதீர் கூட்டம்

கீரனூர் கோட்டத்துக்கு உட்பட்ட கீரனூர், விராலிமலை, குண்டாண்டார் கோவில், கில்லுக் கோட்டை, மாத்தூர், தொண்டைமான் நல்லூர் பகுதிகளுக்கான மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் அம்மா சத்திரம் துணை மின் நிலையம் வளாகத்தில் 13ஆம் தேதி நாளை காலை 11 மணி முதல் 1 மணி வரை புதுக்கோட்டை மேற்பார்வை பொறியாளர் சேகர் தலைமையில் நடக்கிறது. இதில் முன் நுகர்வோர் கலந்து கொண்டு மின்விநியோகம் தொடர்பாக தங்களுக்கு உள்ள இடர்பாடுகள் குறித்து தெரிவித்து பயனடையலாம். இத்தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் பிரேம் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News