கள்ளக்குறிச்சி எஸ்.பி தலைமையில் குறை தீர்வு கூட்டம்

கள்ளகுறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற சிறப்பு காவல்துறை குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களின் புகார் மனுக்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Update: 2024-01-11 10:41 GMT

குறைத்தீர் கூட்டம்

கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு எஸ்.பி., சமய்சிங்மீனா தாலைமை தாங்கி, மனுக்களை பெற்றார். இதில் போலீஸ் ஸ்டேஷன்களில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது முறையான தீர்வு மற்றும் மனுக்களின் மீதான நடவடிக்கையில் திருப்தி பெறாத புகார்தாரர்கள் குறை தீர்வு கூட்டத்தில் பங்கேற்று மனு அளித்தனர். அதில் கடந்த கூட்டத்தில் பெறப்பட்ட 12 மனுக்களில் 10 மனுக்கள் மீது உரிய முறையில் விசாரணை செய்து தீர்வு காணப்பட்டது. நிலுவையில் உள்ள 2 மனுதாரரின் குறைகளை கேட்டறிந்து, அதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து புதியதாக 48 புகார் மனுக்கள் பெறப்பட்டது. கூட்டத்தில் ஏ.டி.எஸ்.பி., மணிகண்டன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.
Tags:    

Similar News