தஞ்சை மாவட்டத்தில் 223 மையங்களில் ஜூன் 9 இல் குரூப் - 4 தேர்வு 

தஞ்சை மாவட்டத்தில், 223 மையங்களில், ஜூன் 9 இல் குரூப் - 4 தேர்வு 

Update: 2024-06-01 11:10 GMT

குரூப் - 4 தேர்வு 

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த குடிமைப்பணி தேர்வு  (தொகுதி - IV)  பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு வரும் ஜூன்.09 அன்று முற்பகல் நடைபெற உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 65,520 தேர்வர்கள், அனைத்து வட்டங்களுக்கும் உட்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள 223 தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளனர்.  இத்தேர்வு நடைபெறும் நாளன்று தேர்வுக் கூடங்களில் நடைபெறும் நிகழ்வுகளை காலை 7 மணி முதல் முதன்மைக் கண்காணிப்பாளர்கள் பாதுகாப்பாக முத்திரையிடும் பிற்பகல் 1.30 மணி வரை பதிவு செய்து, அதன் மெமரி சிப்பினை தேர்வுக்கூட முதன்மைக் கண்காணிப்பாளரிடம் அளித்திட வேண்டும்.  வீடியோ கிராபர்கள் தங்களது வீடியோ புகைப்படக் கருவிகளை தேர்வு நடைபெறும் நாளுக்கு முன்னரே தயார் நிலையில் வைத்திட வேண்டும்.   இத்தேர்வுப் பணிக்கு ரூ.2,500/- (இரண்டாயிரத்து ஐநூறு மட்டும்) ஊதியமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக அறை எண்: 134-இல், ஜி பிரிவு கண்காணிப்பாளரை அணுகி (தொடர்பு எண் : 9865319713) மேலதிக விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News