வாலிபருக்கு 'குண்டாஸ்' - திருநாவலுார் போலீஸ் அதிரடி

உளுந்துார்பேட்டை அருகே அடிக்கடி தகராறு மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-03-29 04:16 GMT

காவல் நிலையம் 

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த களவனுாரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் முத்துராமன், 30; இவர், சில தினங்களுக்கு முன் 3 பேருடன் சேர்ந்து பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் அதே ஊரைச் சேர்ந்த தமிழரசன் என்பவரைத் தாக்கி, கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

இதுகுறித்த புகாரின்பேரில், திருநாவலுார் போலீசார் வழக்குப்பதிந்து முத்துராமனை கைது செய்தனர். இவர், மீது தகராறு மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரது செயல்களைத் தடுக்கும் பொருட்டு, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்.பி., சமய்சிங் மீனா, கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்

. கலெக்டர் ஷ்ரவன்குமார், உத்தரவின் பேரில், முத்துராமன் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகல், கடலுார் மத்திய சிறையில் உள்ள முத்துராமனிடம் திருநவாலுார் போலீசார் வழங்கினர்.

Tags:    

Similar News