மக்களை அச்சுறுத்தியவர் மீது பாய்ந்த குண்டாஸ்

மக்களை அச்சுறுத்தி வருவதாக குற்றவாளி மீது பாய்ந்த குண்டாஸ்

Update: 2024-02-26 06:52 GMT

பாளையங்கோட்டை மத்திய சிறை

நெல்லை மாவட்டம் தாழையூத்து பகுதியில் அடிதடி மற்றும் கொள்ளை வழக்கில் ஈடுபட்ட இசக்கிராஜா கைதாகி ஏற்கனவே சிறையில் உள்ளார். இவர் அடிதடி கொள்ளை வழக்கில் ஈடுபட்டு மக்களை அச்சுறுத்தி வருவதாக தாழையூத்து போலீசார் கவனத்துக்கு சென்றதால் எஸ்பி சிலம்பரசன் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில் போலீசார் நேற்று (பிப்.25) குண்டர் தடுப்பு சட்டத்தில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News