குட்கா விற்றவர் கைது

திருவாரூரில் அத்துமீறி தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்களை விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-12-25 11:20 GMT

 திருவாரூரில் அத்துமீறி தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்களை விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின்படி, திருவாரூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலுமாக ஒழிக்கம் வகையில் தீவிர வேட்டை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. பரவாக்கோட்டை காவல் நிலையம் உள்ளிக்கோட்டை பகுதியில் உள்ள ஜிஜிஆர் பெட்டிக்கடையில் தமிழக அரசின் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின் பெயரில் , கடையை சோதனை செய்தபோது ஹான்ஸ், பான்பராக் பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்ததைஅடுத்து கடையின் உரிமையாளர் உள்ளிக்கோட்டை பேட்டை தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மகன் ராஜா என்பவரை போலீசார் கைது செய்து சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொண்டனர்.
Tags:    

Similar News