குட்கா விற்பனை செய்தவர் கைது

கும்மிடிப்பூண்டியில் குட்கா விற்பனைச் செய்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2024-06-09 07:47 GMT

கைது

கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் பகுதியில் உள்ள கடைகளுக்கு, தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகளை ஒருவர் சப்ளை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார், அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, பதிவு எண் இல்லாத டூ-வீலர் ஒன்றில், 10 கிலோ குட்கா பாக்கெட்டு இருந்ததை பறிமுதல் செய்தனர். எடுத்து சென்ற, சாமிரெட்டிகண்டிகை பகுதியை சேர்ந்த டில்லிபாபு, 28, என்பவரை கைது செய்தனர்.
Tags:    

Similar News