சங்கராபுரம் அருகே குட்கா விற்றவர் கைது

Update: 2023-11-28 08:17 GMT

காவல் நிலையம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சங்கராபுரம் அருகே குட்கா விற்ற நபரை போலீசார் கைது செய்தனர். சங்கராபுரம் அடுத்த செம்பராம்பட்டு கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் உள்ள சிவக்குமார், 54; என்பவரது கடையில் சோதனை செய்ததில் குட்கா விற்றது தெரியவந்தது. உடன் அவரை கைது செய்து, குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News