திருப்பத்தூர் அருகே குட்கா விற்றவர் கைது

திருப்பத்தூர் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பாக்கெட்டுகளை மறைத்து வைத்து விற்பனை செய்த பெட்டி கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-02-16 07:27 GMT

கைது 

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார்  ஜோலார்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்ட இருந்தனர் அப்போது சாலை நகர் பகுதியில் உள்ள பெட்டி கடையில் தமிழக அரசு தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் குட்கா பாக்கெட்டுகளை மறைத்து வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று சாலை நகர் பகுதியில் பெட்டி கடையில் சோதனை செய்யும் போது ஆறுமுகம் (வயது 59) என்பவர் தனது பெட்டி கடையில் தமிழக அரசு தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பாக்கெட்டுகளை மறைத்து வைத்து விற்பனை செய்தவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்து ஜோலார்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் மேலும் இவரிடமிருந்து 5 ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்
Tags:    

Similar News