வந்தவாசி அருகே ரூ.1 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் - வியாபாரி கைது

Update: 2023-12-01 08:24 GMT

கைது 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
 திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தெற்கு காவல்-ஆய்வாளர் விஸ்வநாதன், உதவி காவல் ஆய்வாளர்கள் ராமு, பாபு, தட்சணாமூரத்தி மற்றும் போலீசார், தின்டிவனம் சாலை தனியார் மகளிர் கல்லூரி அருகே நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது வந்தவாசி நோக்கி வந்த பைக்கை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது. பைக்கில் வந்தவரை பிடித்து விசாரித்தபோது, வந்தவாசிசத்யா நகரை சேர்ந்த மணிகண்டன் 45,என தெரியவந்தது. தின்பண்டங்கள் விற்பனை செய்யும் மொத்த வியாபாரியான இவர், வேன் மூலம் கிராமங்களில் உள்ள கடைகளுக்கு திண்பண்டங்கள் சப்ளை செய்து வந்துள்ளார். அப்போது, தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களையும் சப்ளை செய்து வருவது தெரியவந்தது. தொடர்ந்து அவரது வீட்டிற்கு சென்று சோதனையிட்ட போது  1 லட்சம் மதிப்புள்ள 3 மூட்டை குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. உடனே குட்கா மூட்டைகள் மற்றும் பைக்கையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவுசெய்து மணிகண்டனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News