பத்துகாணி பகுதியில் பெய்த ஆலங்கட்டி மழை

கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் 2 மணி நேரமாக இடி மின்னலுடன் பெய்த கனமழை பெய்தது.

Update: 2024-04-29 16:25 GMT
ஆலங்கட்டி மழை 

கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையோர கிராமங்களில் தினமும் மாலை வேளையில் ஆங்காங்கே இடி மின்னலுடன் மழை பெய்து இந்த மலை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் மட்டுமே பெய்து வருகிறது.

நாகர்கோவில் கன்னியாகுமரி மற்றும் தக்கலை உள்ளிட்ட பகுதிகளில் மழை இல்லாத நிலையில் மலை கிராம பகுதிகளில் இந்த மழை காணப்படுகிறது. குமரியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தாலும் மாலை வேலைகளில் அவ்வப்போது இடியுடன் கூடிய கனமழை குமரி மலையோரப் பகுதிகளில் பெய்து வருகிறது.

இன்று மலையோரப் பகுதிகளான களியல், கடையால், பேச்சிப்பாறை கோதையாறு போன்ற பகுதிகளில் இடி, மின்னலுடன் 2 மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது. பத்துகாணி பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது வெப்பத்தின் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்த பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News