காதல் ஜோடி பெற்றோரிடம் ஒப்படைப்பு

சேலத்தில் பரபரப்பு வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி பெற்றோரிடம் ஒப்படைப்பு.

Update: 2024-02-02 05:23 GMT

காதல் ஜோடி பெற்றோரிடம் ஒப்படைப்பு

ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த 22 வயது கல்லூரி மாணவரும், சிவகாசியை சேர்ந்த 19 வயது மாணவியும் ஒருவரையொருவர் காதலித்து உள்ளனர். காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் சம்பவத்தன்று இருவரும் வீட்டை விட்டு வெளியேறி சேலத்திற்கு வந்தனர். அவர்கள் ஒரு ஆட்டோ டிரைவரிடம் ரூ.3,500 கொடுத்து வீடு வாடகைக்கு பிடித்து தரும்படி கேட்டு உள்ளனர். பல இடங்களில் தேடி பார்த்தும் வாடகைக்கு வீடு கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஆட்டோ டிரைவர் காதலர்கள் கொடுத்த பணத்தில் ரூ.1,000 வாடகைக்கு எடுத்துக்கொண்டு மீதிப்பணத்தை அவர்களிடம் கொடுத்து உள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இது குறித்து காதல் ஜோடி கிச்சிப்பாளையம் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி ஆட்டோ டிரைவரை அனுப்பி வைத்தனர். பின்னர் காதல் ஜோடியிடம் விசாரணை நடத்திய போது 2 பேரும் பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறியது தெரிந்தது. 2 பேரின் பெற்றோரை வரவழைத்து, காதலர்களை அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
Tags:    

Similar News