துறைமுக பகுதி சாலை விரிவாக்கப் பணிகள் மின்தடை அறிவிப்பு

தூத்துக்குடி துறைமுக பகுதி சாலை விரிவாக்கப் பணிகள் காரமாக மே 4ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-05-04 03:42 GMT

மின்தடை

தூத்துக்குடி துறைமுக பகுதி சாலை விரிவாக்கப் பணிகள் காரமாக மே 4ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி நகர்ப்புற மின்சார வினியோக செயற்பொறியாளர் ராம்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தூத்துக்குடி தெற்கு உபகோட்டம் முத்தையாபுரம் மற்றும் சிப்காட் மின்சார வினியோக பிரிவுக்கு உட்பட்ட துறைமுக பகுதியில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடக்கிறது. இதனால் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் 12 மணி வரை காதர்மீரான் நகர், முத்துநகர், ஊரணி ஒத்தவீடு, வாழைக்காய் காய்கறி மார்க்கெட் பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது என்று தெரிவித்து உள்ளார்.
Tags:    

Similar News