குமரி அரசு மருத்துவக் கல்லூரியில் சுகாதார தின ஊர்வலம்

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மருத்துவ கல்லூரியில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைப்பெற்றது.

Update: 2024-04-09 05:54 GMT
கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரியில் உலக சுகாதார தின உறுதி மொழி எடுத்த டாக்டர்கள், .மாணவ மாணவிகள்

கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் உலக சுகாதார தினம் முன்னிட்டு உலக சுகாதார தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் பிரின்ஸ் பயஸ் தலைமை வகித்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். டாக்டர் சுரேஷ் பாலன் முன்னிலை வகித்தார்.

இதில் மருத்துவ கல்லூரி உறைவிட மருத்துவர் டாக்டர் ஜோசப் பென், கண்காணிப்பாளர் டாக்டர் அருள் பிரகாஷ், உதவி மருத்துவர்கள் டாக்டர் விஜயலட்சுமி, ரெனி மோள் மற்றும் டாக்டர்கள், மருத்துவ மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். விழாவில் சுகாதார தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Tags:    

Similar News