இரவு முழுவதும் இடைவிடாமல் கொட்டி தீர்த்த கனமழை

தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் இடைவிடாமல் கனமழை கொட்டி தீர்த்தது.

Update: 2024-05-21 00:40 GMT

தமிழகம் முழுவதும் தர்மபுரி மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பொழிய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது அதன்படி தர்மபுரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பொழிந்து வரும் சூழலில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டிருந்த நிலையில் நேற்று மாலை முதல் கனமழை பொழிய துவங்கியது.

தர்மபுரி, ஒட்டப்பட்டி,ஆட்சியர் அலுவலகம், அதியமான் கோட்டை, நல்லம்பள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு முழுவதும் இடைவிடாமல் கனமழை பொழிந்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு நலன் கருதி மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட்டது.

Tags:    

Similar News