மகாராஜகடை சுற்றுவட்டார பகுதிகளில் 3 மணி நேரம் கனமழை

மகாராஜகடை சுற்றுவட்டார பகுதிகளில் 3 மணி நேரம் கனமழை பெய்த்ததால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Update: 2024-06-20 00:46 GMT

மகாராஜகடை சுற்றுவட்டார பகுதிகளில் 3 மணி நேரம் கனமழை பெய்த்ததால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.


மகாராஜகடை சுற்றுவட்டார பகுதிகளில் 3 மணி நேரம் கனமழை பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி கிருஷ்ணகிரி மாவட்டம் மகராஜகடை சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக வெயில் சுட்டெரித்து வந்தது. இந்த நிலையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் மாலை 3 மணி முதல் 6 மணி வரை கனமழை வெளுத்து வாங்கியது. இதில் மகாராஜாகடை, நார்லபள்ளி, சக்கனாவூர் நலகுண்டுலபள்ளி ஏக்கல்நத்தம் மற்றும் பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சீதோசன நிலை நிலவி வருகிறது.
Tags:    

Similar News