ஆசனூர் மலைப்பகுதியில் கனமழை

ஆசனூர் மலைப்பகுதியில் பெய்த கனமழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

Update: 2024-05-14 03:25 GMT

பைல் படம் 

சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் மலைப்பகுதியில் பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது இதனால் பொதுமக்கள் பகலில் வீட்டிலேயே முடங்கினார்கள் இந்த நிலையில் ஆசனூர் சுற்றுவட்டாரப் பகுதியில் நேற்று மாலை கருமேகங்கள் திரண்டு கனமழை பெய்யத் தொடங்கியது. கனமழை காரணமாக அரேயப்பாளையத்தில் இருந்து கோட்டடை செல்லும் வழியில் மழை வெள்ளம் ரோட்டில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள். தற்போது ஆசனூர் மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குளிர்ந்த சீதோசன நிலை உருவாகியுள்ளது இதனால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
Tags:    

Similar News