கடம்பூர் சுற்றுவட்டார பகுதியில் கனமழை
கடம்பூர் சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
Update: 2024-05-22 13:42 GMT
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடம்பூர் அடுத்த அஞ்சனை பிரிவு என்ற இடத்தில் தரைப்பாலத்தின் வழியாக மழை வெள்ளநீர் சாலையில் பாய்ந்து ஓடுகிறது. இதனால் இந்த பாலத்தின் இரு பக்கங்களிலும் சிறிய நேற்று போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.