வேப்பனபள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

வேப்பனபள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் பெய்த கனமழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Update: 2024-06-27 04:16 GMT

பைல் படம் 

 கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று  காலை முதலே வானம் மேக மூட்டத்தில் காணப்பட்ட வந்த நிலையில் திடீரென்று மாலை 3 மணி முதல் 4 மணி வரை ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. வேப்பனப்பள்ளி நேரலகிரி நாச்சிகுப்பம் தீர்த்தம் நெடுசாலை சிங்கிரிப்பள்ளி மற்றும் பகுதிகளிலும் கனமழை பெய்தது. கன மழையால்  விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News