ஸ்ரீவில்லிபுத்தூரில் அரை மணி நேரமாக கொட்டி தீர்த்த கனமழை

ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அரை மணி நேரமாக கனமழை கொட்டி தீர்த்தது.

Update: 2024-05-09 03:01 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அரை மணி நேரமாக கனமழை கொட்டி தீர்த்தது.


 விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மம்சாபுரம், வன்னியம்பட்டி, இந்திராநகர் உள்ளிட்ட பகுதிகளில் வெப்பச்சலனம் காரணமாக திடீரென பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய கனமழை சுமார் அரை மணி நேரம் பெய்தது. காலையிலிருந்து வெயில் வாட்டி வதைத்து வந்த நேரத்தில் திடீரென அரை மணி நேரம் கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் இரவில் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Tags:    

Similar News