4000 குடும்பங்களுக்கு உதவி: பாஜக மாநிலத் தலைவர்

4000 குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளதாக பாஜக ஸ்டார்ட் ஆப் பிரிவு மாநிலத் தலைவர் ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-12-26 14:49 GMT

ஆனந்தன்

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4000 குடும்பங்களுக்கு பாஜக ஸ்டாா்ட் பிரிவு மற்றும் சோகோ பவுண்டேஷன் சாா்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளதாக பாஜக ஸ்டாா்ட் அப் பிரிவு மாநில தலைவா் ஆனந்தன் தெரிவித்தாா்.

வாசுதேவநல்லூரில் அவா் கூறியது: திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பெருமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சோகோ பவுண்டேஷன் உதவியுடன் பாஜக ஸ்டாா்ட் அப் பிரிவு சாா்பில் முதல் கட்டமாக 4000 குடும்பங்களுக்கு நிவாரண உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களை திருநெல்வேலி சட்டப்பேரவை உறுப்பினா் நயினாா்நாகேந்திரன் உள்ளிட் டோா் சந்தித்து நிவாரணப் பொருள்களை வழங்கினோம்.

மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமனின் ஆய்வுக்கு பின்னா் பாஜக ஸ்டாா்ட் அப் பிரிவு சாா்பிலும், வாய்ஸ் ஆப் தென்காசி அறக்கட்டளை சாா்பிலும் அடுத்த கட்ட நிவாரண திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றாா்.

Tags:    

Similar News