வடகாட்டில் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

வடகாட்டில் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-05-19 12:03 GMT

கோப்பு படம் 

ஆலங்குடி அருகேயுள்ள வடகாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. ஆலங்குடி அருகேயுள்ள வடகாட்டில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. கிராம நிர்வாக அலுவலர் மு.ராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய,

மாநி அரசுகளின் சார்பிலான உயா கல்வி குறித்து விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் கே.பாலசுப்பிரமணியன் பேசுகையில், கைப்பேசிகளை தேவைக்கு ஏற்ப மட்டுமே மாணவர்கள் பயன்படுத்த வேண்டும். வாழ்க்கையில் மிக உயர்ந்த இடத்தை அடைவதற்கு மிகச் சிறந்த ஆயுதம் கல்விதான் என்றார்.

நிகழ்ச்சியில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் கிளை தலைவர் எஸ்.டி.பஷீர் அலி, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் நிர்வாகிகள் அறிவொளி கருப்பையா,தமிழரசன் உள்ளிட்டோர் பேசினர். நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News