போதைப்பொருள் நடமாட்டம்: இந்து இளைஞர் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
போதைப்பொருள் நடமாட்டத்தை கண்டித்து இந்து இளைஞர் முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-05 09:57 GMT
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பினர்
தமிழகத்தில் போதைப்பொருட்களின் நடமாட்டதால் போதைப்பொருட்களின் தலைநகராக தமிழகம் மாறுவதாகவும் , அதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி இந்து இளைஞர் முன்னணியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரோடு சூரம்பட்டி வரசு பகுதியில் இந்து முன்னணி மாவட்ட தலைவர் ஜெகதீசன் தலைமையில் நடைபெற்ற இந்த கண்ட ஆர்ப்பாட்டத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை கண்டித்தும் , தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.