பொம்மை வாங்கி தராததால் மனைவி மாயம்

திருப்புவனம் அருகே பொம்மை வாங்கி தராத விரக்தியில் இருந்த மனைவியை காணவில்லை என கணவன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Update: 2024-01-19 12:44 GMT

திருப்புவனம் அருகே பொம்மை வாங்கி தராத விரக்தியில் இருந்த மனைவியை காணவில்லை என கணவன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே பீசர்பட்டினத்தைச் சேர்ந்தவர் கண்ணன். டிரைவராக பணியாற்றும் இவர் தனது மனைவி அழகம்மாள் (36) மற்றும் குழந்தைகளுடன் பழநி கோயிலுக்கு சென்றனர். குழந்தைகளுக்கு பொம்மை வாங்கி தருவதில் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஊர் திரும்பிய உடன் அழகம்மாள் மாயமானார். அக்கம் பக்கத்தில் எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் அவரது கணவர் கண்ணன் திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Tags:    

Similar News