புனித ரமலான் இரவு சொற்பொழிவு நிகழ்ச்சி

மேலப்பாளையத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் புனித ரமலான் இரவு சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2024-03-29 05:55 GMT

சொற்பொழிவு நிகழ்ச்சி 

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு நேற்று (மார்ச் 28) இரவு தராவீஹ் தொழுகைக்கு பிறகு சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.மஸ்ஜிதுத் திப்யான் பள்ளிவாசலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேச்சாளர் பத்ரு அலி கலந்து கொண்டு உளத்தூய்மை என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் அப்பகுதியை சேர்ந்த ஆண்கள்,இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாட்டை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News