சேலத்தில் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி

நாளை வரை நடைபெறும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சியில் பொதுமக்கள் கலந்து தேவையான பொருட்களை பெற்றுகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Update: 2023-12-23 10:24 GMT

சேலத்தில் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி

ரோட்டரி கிளப் ஆப் சேலம் மெட்ரோ போலீஸ் சார்பில் சேலத்தில் மெட்ரோ எக்ஸ்போ 2023 என்ற வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி 5ரோடு அருகே உள்ள ஸ்ரீ ரத்தினவேல் ஜெயகுமார் திருமண மண்டபத்தில் நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சி நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை நடக்கிறது. கண்காட்சி காலை 10.30 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். இந்த கண்காட்சியை கே.ஏ.ஜி. டைல்ஸ் நிர் வாக இயக்குனர் முரளிதரன் தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக 'ஈஸ்ட்வெஸ்ட்' கம்பெனிகளின் தலைவர் மோகன்குமார், ஸ்ரீ கோகுலம் மருத்துவமனையின் இயக்குனர் செல்லம்மாள், ரோட்டரி முன்னாள் கவர்னர்கள் தர்மேஸ் பட்டேல், கோவிந்தராஜன், வாசு, வெங்கடேசன் மற்றும் உதவி கவர்னர் பாலச்சந்தர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News