ஊா்க்காவல் படை வீரா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி அரியமங்கலத்தில் குடும்பப் பிரச்னையால் ஊா்க்காவல் படை வீரா் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-05-23 01:46 GMT

தற்கொலை

திருச்சி அரியமங்கலம் காமராஜா் நகரை சோ்ந்தவா் மாரிமுத்து மகன் திலகா் (24). இவா் ஓட்டுநராக இருந்ததுடன், கடந்த 2018 முதல் ஊா்க்காவல் படையிலும் இருந்தாா். கரூா் திருமகூடனூரைச் சோ்ந்த நேஜா என்பவரை ஓராண்டுக்கு முன் இவா் காதல் திருமணம் செய்த நிலையில், குழந்தை இல்லாததால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இதே போல, கடந்த 20 நாள்களுக்கு முன்பு ஏற்பட்ட பிரச்னையில் நேஜா கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்ற நிலையில், கணவா் வீட்டுக்கு வர மறுத்துள்ளார்.

இதனால் மனமுடைந்த திலகா், செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கோயிலுக்குச் சென்று தாய் வீடு திரும்பியபோது இது தெரியவந்தது. தகவலின்பேரில் வந்த அரியமங்கலம் போலீஸாா் திலகரின் சடலத்தைக் கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Tags:    

Similar News