அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரமாண்ட வாகன பேரணி

நாகர்கோவிலில் அதிமுக சார்பில் கன்னியாகுமரி மக்களவை தொகுதி வேட்பாளர் பசிலியான் நசரேத், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ராணி ஆகியோரை ஆதரித்து வாகன பேரணி நடைபெற்றது.

Update: 2024-04-12 04:24 GMT

வாகன பேரணி 

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து வடசேரி எம் ஜி ஆர் சிலை அருகில் இருந்து மணிமேடை வரை பிரமாண்ட வாகன பேரணி நேற்று மாலை நடைபெற்றது.  இந்த பேரணிக்கு கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் தளவாய் சுந்தரம் எம்எல்ஏ தலைமை வைத்தார்.  திறந்த வாகனத்தில்  முன்னாள் எம் பி நாஞ்சில் வின்சென்ட், அமைப்புச் செயலாளர் கே டி பச்சைமால், மேற்கு மாவட்ட செயலாளர் ஜான் தங்கம், வேட்பாளர்கள் பசிலியான் நசரேத், ராணி ஆகியோர் நின்றபடி வாக்கு சேகரித்தனர்.   இந்த பேரணியில் வழி நெடுகிலும் வேட்பாளர்கள் மீது மலர் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து  மணிமேடை சந்திப்பில் தளவாய் சுந்தரம் எம்எல்ஏ பேசுகையில், -  இந்த பேரணி வெற்றி பேரணி. இரட்டை இலைக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும். கடந்த தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து பொதுமக்களை ஏமாற்றிவிட்டு திமுகவினர் ஆட்சியமைத்தனர். 2026 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக ஆட்சி அமையும் என்று கூறினார். இந்த பேரணியில் முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News